இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷே..!

Default Image

இலங்கையின் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ட்வீட் செய்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்திருந்தார். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தற்போது பதவியேற்றுள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை சந்தித்து, புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையின் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு வாழ்த்துக்கள். இக்கட்டான சூழலில் பொறுப்பேற்றுள்ள நிலையில் நாட்டை சிறப்பாக வழிநடத்த வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat
good bad ugly ajith ilayaraja
Madurai MP Su Venkatesan