அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
வால்டர் ரீட் ராணுவ மருத்துவமணையில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வேண்டி உலக நாடுகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் டிரம்பிற்கு எதிராக போட்டியிடும் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று நானும்,எனது மனைவி ஜில்லும் விரும்புகிறோம். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…