பிரசன்னா அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் பிரசன்னா. கடைசியாக அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா ஒரு புதிய வெப் சீரிஸை தயாரிக்கிறார். அந்த வெப் சீரிஸில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, அபிராமி வெங்கடாசலம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பிரசன்னா நடிக்கும் எபிசோடை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும், அந்த ஆந்தலாஜி குறும்பட எபிசோடிற்கு ‘திரவம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்தாண்டு அருள்நிதி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான ‘k13’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரசன்னாவுடன் இரண்டு முறை பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றும், இந்த முறை அவரை வைத்து குறும்படம் இயக்குவதாகவும், விரைவில் இதனை குறித்த மற்ற விவரங்கள் வெளிவரும் என்று கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…