கடன் வாங்கி உதவி செய்யும் பிரகாஷ்ராஜ்.!

Default Image

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  கொரனாவிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கூறி பல பிரபலங்கள் வீடியோவையும், தங்கள் கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளிகளுக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிமாநில தொழிலார்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் உணவின்றி தவித்து வருகின்றனர், மேலும் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளிமாநில தொழிலார்களுக்கு கர்நாடகத்தில் உதவி செய்து வருகிறார், அந்த தொழிலார்களுக்கு தேவையான உணவு, மற்றும் இடம் போன்றவற்றை கொடுத்துள்ளார், இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறியது, தன்னால் தொடர்ந்து உதவி செய்யமுடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அதனால் தான் சோர்ந்து விடவில்லை என்றும் கடன் வாங்கி உதவி செய்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்