100 கோடியா சம்பளம்?! இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய வைத்த செய்தி!

பாகுபலி எனும் பிரமாண்ட படம் மூலம் தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கியவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படமும் பிரமாண்ட படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கி உள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிக்க பிரபாஸிற்கு படத்தின் லாபத்தில் பங்கு என கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தற்போது அவருக்கு சம்பளமாக 100 கோடி சம்பளம் தரப்பட்டுவிட்டதாம், இந்த தகவல் இந்திய சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.