பிளாக் பஸ்டர் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் பிரபாஸ்.!

Published by
Ragi

பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தினை தொடர்ந்து கே.ஜி.எஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ராதே ஷியாம் எனும் படத்தில் நடித்து வருகிறார் .அதனை தொடர்ந்து ஆதி புருஷ் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு,கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளிலும் உருவாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபாஸ் அவர்கள் ஆதிபுருஷ் படத்தினை தொடர்ந்து சூப்பர் பட இயக்குனருடன் கைக்கோர்க்க உள்ளார் . பிரபாஸ் அடுத்தாக கேஜிஎஃப் பட இயக்குனருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல் .தற்போது இவர் கே.ஜி.எஃப்-2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

கேஜிஎஃப்-2 படத்தை அடுத்து இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாகவும் ,அதில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வெற்றி படங்களை ரசிகர்களுக்கு அளித்த பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

8 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

5 hours ago