15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைப்பு ! – உச்சநீதிமன்ற தீர்ப்பு

Default Image

கர்நாடகாவில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு தகுதி நீக்கம் செய்த 17 எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெறிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்த இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் வரை தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என உச்சநீதிமன்றம்,  தேர்தல் ஆணையத்திடம் கேட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதால், 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்