போர் பின்னணியில் காதல் படமாக உருவாகும் துல்க்கர் படத்தின் போஸ்ட்ர்.!

Published by
Ragi

துல்க்கர் சல்மான் அடுத்து நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் துல்க்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அவை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது மலையாளத்தில் குறூப், தமிழில் ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.தெலுங்கில் ‘மஹாநடி’ படத்தை அடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த துல்க்கர் தற்போது ஒரு புதிய தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நேற்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் இந்த படத்தை ஸ்வப்னா சினிமாஸின் பிரியங்கா தத் மற்றும் ஸ்வப்னா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஹனு ராகவாபுடி இயக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படம் 1964ம் ஆண்டின் காதல் கதையாக உருவாகவுள்ளது.

துல்க்கர் ராணுவ வீரர் தோற்றத்தில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைந்திருப்பது போன்றும் உள்ள அந்த போஸ்ட்ரில் ராணுவ வீரன் ராம் போரூற்றி எழுதிய காதல் கதை என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் போர் பின்னணியில் உருவாகும் ஒரு காதல் கதையாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. தற்போது அந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

19 mins ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

37 mins ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

42 mins ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

57 mins ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

1 hour ago

பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!

சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…

1 hour ago