துல்க்கர் சல்மான் அடுத்து நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் துல்க்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அவை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது மலையாளத்தில் குறூப், தமிழில் ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.தெலுங்கில் ‘மஹாநடி’ படத்தை அடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த துல்க்கர் தற்போது ஒரு புதிய தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நேற்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் இந்த படத்தை ஸ்வப்னா சினிமாஸின் பிரியங்கா தத் மற்றும் ஸ்வப்னா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஹனு ராகவாபுடி இயக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படம் 1964ம் ஆண்டின் காதல் கதையாக உருவாகவுள்ளது.
துல்க்கர் ராணுவ வீரர் தோற்றத்தில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைந்திருப்பது போன்றும் உள்ள அந்த போஸ்ட்ரில் ராணுவ வீரன் ராம் போரூற்றி எழுதிய காதல் கதை என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் போர் பின்னணியில் உருவாகும் ஒரு காதல் கதையாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. தற்போது அந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…