கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட தபால் வாக்குப்பதிவு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இலங்கையில் நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு எந்த வன்முறையும் இல்லாமல், நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது.
இலங்கை முழுவதும் சுமார் 10,000 சுகாதார அதிகாரிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தபால் வாக்குபதிவு மொத்தம் 5 நாட்கள், 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தவறும் அரசு ஊழியர்கள், 2ம் கட்டமாக அடுத்த வாரம் 2 நாட்கள் நடைபெறும் தபால் வாக்குப்பதிவில் வாக்களிக்கலாம்.
இந்த தபால் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…