கொரோனாவால் நிறுத்தப்பட பிரபலமான விஜய் டிவி தொடர்!

Default Image

தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிரபலமான தொடர்தான் ஆயுத எழுத்து. இந்த தொடரில் நடித்த கதாநாயகி சரண்யா நெஞ்சம் மறப்பதில்லை என்னும் தொடர் மூலம் பிரபலமாகியவர். இவருக்காகவே இந்த சீரியலை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், கொரோனா பிரச்சனையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது இந்தப் பிரச்சினை முடிவடைந்த பின்பு மீண்டும் சந்திப்போம் என்று கூறி இந்த தொடர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இது குறித்த வீடியோவை தொடரின் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்