மேக்னா ராஜ் அவர்களின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2010ஆம் ஆண்டு காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மேக்னா ராஜ். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகரான ஜெர்ரி நடித்திருந்தார். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை இன்றைய காலகட்டத்திலும் அனைவரது பேவரட்டாக உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக படங்களை நடிக்கா விட்டாலும், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார் . அதன் பின்னர் அவர் 2018இல் கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா ‘Vayuputra’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ராஜமார்தாண்டா, ஏப்ரல், ரணம் உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.
இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனும், துருவ் சார்ஜா அவர்களின் சகோதரரும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நான்கு படங்களில் நடித்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை மூச்சு திணறல் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.39 வயது மட்டுமே ஆன சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் திரையுலகில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பல பிரபலங்கள் சிரஞ்சீவியின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…