பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அதில் மாதவன், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பிரபல பளுதூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கோனா பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருப்பதாகவும், இதனை சஞ்சனா ரெட்டி இயக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மல்லேஸ்வரியாக நடிக்க பிரபல ஹீரோயின்களான நயன்தாரா, திரிஷா மற்றும் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது கர்ணம் மல்லேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங்கை தேர்வு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கர்ணம் மல்லேஸ்வரியின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருதுவதாகவும், அதனாலேயே படக்குழுவினர் அவரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் .ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…