இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் இவரது கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.
இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்பட ஷூட்டிங் தாய்லாந்தில் உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து தற்போது முதல் அதிகாரபூர்வ அப்டேட்டாக அப்படதில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது.
இப்படத்தினை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம் & குமரவேல், வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர்.ரகுமான், கலை – தோட்டா தரணி, ஒளிப்பதிவு – ரவி வர்மன் என பல அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் பாடலாரசியர் வைரமுத்து பெயர் இதில் இல்லை. மேலும் வேறு பாடலாசிரியர் பெயரும் இல்லை. 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் இன்னும் பாடலாசிரியர் பெயர் அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…