பொன்னியின் செல்வன் படகுழுவிடம் இருந்து அதிகாரபூர்வமாக முதலில் வெளியான பிரமாண்ட அறிவிப்பு!

Published by
மணிகண்டன்
  • மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் தற்போது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
  • இப்படத்தில் இருந்து முதன் முதலாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் இவரது  கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.

இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்பட ஷூட்டிங் தாய்லாந்தில் உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து தற்போது முதல் அதிகாரபூர்வ அப்டேட்டாக அப்படதில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம் & குமரவேல், வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர்.ரகுமான், கலை – தோட்டா தரணி, ஒளிப்பதிவு – ரவி வர்மன் என பல அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் பாடலாரசியர் வைரமுத்து பெயர் இதில் இல்லை. மேலும் வேறு பாடலாசிரியர் பெயரும் இல்லை. 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் இன்னும் பாடலாசிரியர் பெயர் அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…

22 minutes ago

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை.? சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…

22 minutes ago

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…

2 hours ago

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…

3 hours ago

“திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

3 hours ago

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

12 hours ago