பொங்கல் பண்டிகை:முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார் …!

Default Image

பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சென்னையிலிருந்து ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் .கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்