“கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்யாகும்.. நான் மீண்டும் அதிபராக வருவேன்”- டிரம்ப்!

Published by
Surya

அமெரிக்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் மிக முக்கியமானது எனவும், இந்த தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் அதிபராக வருவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவி வரும் சூழலிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, அமெரிக்க ஊடகங்களும் தொடர்ந்து கருத்து கணிப்புகளை நடத்தி கொண்டே வருகிறது. இதுவரை நடந்த கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்பை விட, முன்னாள் துணை அதிபரான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலையில் உள்ளார்.

அதற்க்கு காரணம், மக்களுக்கு டிரம்ப் மீது ஏற்பட்ட அதிருப்தி. கொரோனா வைரஸை கையாண்ட விதம். நோய் பரவுவதை ஆரம்பத்தில் இருந்து கவனிக்காததே அது தற்பொழுது இந்தளவுக்கு வந்ததற்கு காரணம் என மக்கள் சிலர் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமின்றி, டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அவர் எடுத்த சில முடிவுகள், அவரின் புகழை பெரிதளவில் குறைத்து. மேலும், ஜார்ஜ் பிலோய்ட் கொலை வழக்கில் டிரம்பின் சர்ச்சைகுரிய பேச்சு மற்றும் கறுப்பின மக்களுக்கு எதிரான செயல்கள், அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை, போன்ற கொள்கைகளே மக்கள் டிரம்பை எதிர்க்க காரணமாக அமைந்தது.

இந்நிலையில், தற்பொழுது நடக்கவுள்ள அதிபர் தேர்தல் மிக முக்கியமானது எனவும், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது ஆட்சியில் யாரும் செய்யாத பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றியை சந்தித்தது போல் இந்த தேர்தலிலும் நடக்கும் எனவும், நான் மீண்டும் அதிபராக வருவேன் என நம்புகிறேன். சில கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என தெரிவித்த அவர், தேர்தல் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

4 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

5 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

5 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

6 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

6 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

7 hours ago