இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை.
இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு எழுத்துபூர்வமான உத்தரவை பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமான இடமாக காலி முகத் திடல் பார்க்கப்படுகிறது. அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனால் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…