மறைந்த சித்ராவின் கணவரிடம் இரண்டாவது நாளாக காவல்துறை விசாரணை.!

Default Image

நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்திடம் இரண்டாவது நாளாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் . சித்ராவின் மரணம் கொலையா ?தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாவதாக அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் நேற்று விசாரணை மேற்கொண்ட போது இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறயிருந்ததாக கூறப்பட்டது .மேலும் இன்று சித்ராவின் உடற்கூராய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக சித்ராவின் மரண வழக்கு தொடர்பாக கணவர் ஹேமந்திடம் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் சித்ராவின் மரணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Kerala CMO bomb threat
PUDUCHERRY'
16 Youtube channels block
TN CM MK Stalin
WhatsApp Fake news
GT Vs RR