மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் பாபு மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த பெண் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் பாபு மீதான இந்த புகாரின் அடிப்படையில் விஜய் பாபுவுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…