ஜோதிகா புகார் செய்த மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள்..!

Published by
Ragi

ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லை என்றும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோயில்களில் உண்டியலில் காசு போடுவதை போன்று பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் காசு கொடுங்கள். ஏனெனில் அவையாவும் பராமரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த பேச்சிற்கு  பல நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஜோதிகா அவர்கள்  எந்த மதத்திற்கும் ஆதரவாக பேசவில்லை என்றும், பள்ளி, மருத்துவமனைகளுக்கும் கோவிலுக்கு நிதியுதவி வழங்கி பராமரிப்பதை போன்று அதற்கும் நிதியுதவி வழங்கி பராமரியுங்கள் என்று தான் கூறினார் என்றும் அவருக்கு  ஆதரவாக பேசி விளக்கமளித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரான கோவிந்தராவ் உத்தரவின் பேரில் அந்த அரசு மருத்துவமனையை  ஜேஸிபி மூலம் சுத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் பத்து பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். அவற்றுள் 5பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இந்த செய்தியை கேட்டதும் அச்சத்தில் உள்ளாகியுள்ளனர்.

Published by
Ragi
Tags: jothikasneak

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

3 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

4 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

4 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

5 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

7 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

8 hours ago