ஊழலுக்கு மத்தியில் மிக ஆடம்பரமான ஹாண்ட் பேக்வுடன் துபாய்க்கு தப்பி சென்ற இம்ரான் கானின் மனைவியின் தோழி.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் தோழி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது ஃபரா கான் தனது கால்களுக்கு அருகில் ஒரு பேக்யுடன் ஆடம்பரமாக பயணிக்கும் புகைப்படம் இதில் வைரலாகி வருகிறது. இருப்பினும், அவர் பயணம் செய்யும் தேதி தெளிவாக இல்லை. அவருடன் இருக்கும் பேக் 90,000 டாலர்கள் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் உறுப்பினர் ரோமினா குர்ஷித் ஆலம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து, அந்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, இம்ரான்கான் பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து அவரது மனைவியின் நெருங்கிய தோழியான பராக்கான் என்பவர் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் தோழி திடீரென பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர் மிக ஆடம்பரமான ஹாண்ட் பேக் ஒன்றை எடுத்து சென்றதாகவும், அதன் மதிப்பு 90,000 டாலர்கள் என இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…