அட கடவுளே.., குடும்பத்தாரை தாக்கி பதவியை இழந்த பிரதமர்..!

Default Image

மனைவி, மகளை தாக்கிய பெரு நாட்டு பிரதமர் ஹெக்டர் வலெர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளுக்குப் எதிராக  புதிதாக நியமிக்கப்பட்ட பெரு பிரதமருக்கு எதிராக பெருவின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, பிரதமர் ஹெக்டர் வாலர் பின்டோவை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு பிரதமர் ஹெக்டர் வாலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் உலக அளவில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.  பிரதமர் பின்டோ குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் பின்டோவின் மனைவியும், மகளும் அவருக்கு எதிராக இரண்டு முறை குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பிரதமர் பின்டோவை பதவி விலகுமாறு பாராளுமன்ற சபாநாயகர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly