முக்கியச் செய்திகள்

நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா..! கண்டுபிடித்து தகவல் அனுப்பிய லேண்டர்.!

Published by
செந்தில்குமார்

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, விக்ரம் லேண்டரில் இருக்கக்கூடிய RAMBHA-LP ஆய்வு கருவி, இதுவரை செய்திருக்கக்கூடிய முதற்கட்ட ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “சந்திரயான்-3 லேண்டரில் உள்ள ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர் – லாங்முயர் ஆய்வு (RAMBHA-LP) பேலோட் ஆனது தென் துருவப் பகுதியில் நிலவின் பிளாஸ்மா சூழலை முதன்முதலில் அளவீடு செய்துள்ளது.”

“ஆரம்ப மதிப்பீடு சந்திர மேற்பரப்புக்கு அருகில் உள்ள பிளாஸ்மா ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இந்த அளவு அளவீடுகள் சந்திர பிளாஸ்மா ரேடியோ அலை தகவல்தொடர்புகளில் அறிமுகப்படுத்தும் இரைச்சலைத் தணிக்க உதவும். மேலும், வரவிருக்கும் சந்திர பார்வையாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளுக்கு அவர்கள் பங்களிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது.

இந்த முதற்கட்ட ஆய்வறிக்கையில், “நிலவின் தென் துருவப் பகுதியின் மேற்பரப்பிற்கு அருகே பிளாஸ்மா அயனிகள் இருப்பதாக RAMBHA-LP பேலோட் கண்டறிந்து முதல் இடநிலை அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திர மேற்பரப்பை உள்ளடக்கிய பிளாஸ்மா ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 5 முதல் 30 மில்லியன் எலக்ட்ரான்கள் வரையிலான அடர்த்தியைக் கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

7 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

27 minutes ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

43 minutes ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

1 hour ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

1 hour ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago