திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்! காவல்நிலையத்தில் புகாரளித்த பிரபல நடிகை!

Published by
லீனா
  • திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்.
  • காவல்நிலையத்தில் புகாரளித்த சனம் செட்டி.

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் இவர்கள் காதலுக்கு இடையே முறிவு ஏற்பட்டதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகை சனம் செட்டி சென்னை காவல்நிலையத்தில், தர்சன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தர்சனுக்கும், அவருக்கும் கடந்த வருடம் மே மாதம் நிச்சயம் நடைபெற்றதாகவும், ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதால், திருமணத்தை தள்ளி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் தன்னுடைய பங்கும் உள்ளது என்றும், தர்சனுக்காக அவர் 15 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

28 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

41 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

1 hour ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

2 hours ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

3 hours ago