பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .
வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள பிக்பாஸ் கொண்டாட்டத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ள நிலையில் பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடியுள்ளனர் .ஆம் அர்ச்சனா, ஷிவானி,ரேகா,பாலாஜி, ஜித்தன் ரமேஷ், ரம்யா,சோம்,கேபி ,ரியோ , சுரேஷ் சக்கரவர்த்தி,ஆஜீத், சம்யுக்தா,அனிதா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் நேற்றைய தினம் வெளியான களத்தில் சந்திப்போம் படத்தினை ஒன்றாக கண்டு களித்துள்ளனர்.அதனுடன் அவர்கள் அனைவரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் வீட்டிற்கும் சென்றுள்ளதாகவும் , அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சுரேஷ் சக்கரவர்த்தி தனது வீட்டிற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார் .இதில் சனம் ,நிஷா ,வேல் முருகன்,ஆரி மற்றும் சுசித்ரா ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் மீண்டும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…