இலங்கை, கண்டியில் ஒவ்வொரு ஆண்டும், பெரஹெரா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் ஊர்வலம் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடப்பெறும். இதனையடுத்து, இந்த விழா ஆகஸ்ட் 5-ம் தேதி துவங்கி, நேற்று இரவு நிறைவடைந்துள்ளது. இந்த விழாவில் 50 யானைகள் மற்றும், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 70 வயதுள்ள டிக்கிரி என்ற பெண் யானையும் கலந்து கொண்டுள்ளது. யானைகள் என்றாலே நமது மனதில் தோன்றுவது, அது ஒரு பெரிய, உடல் எடை அதிகமான மிருகம் என்று தான் தோன்றும். ஆனால், இந்த யானையோ, நடப்பதற்க்கே உடலில் பெலன் இல்லாமல், மெலிந்த நிலையில், எலும்பும் தோலுமாக உள்ளது.
இந்நிலையில், சேவ் எலிபெண்ட் என்ற அறக்கட்டளை இந்த யானையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த யானை குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, “டிக்கிரிக்கு உடல்நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று.
திருவிழா தொடங்கும் போது, அதாவது மாலை நேரங்களில் இந்த பேரணிக்கு செல்லும் டிக்கிரி, மீண்டும் நள்ளிரவில் தான் அதன் இருப்பிடத்திற்கு செல்கிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர். அதனால், டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது.” தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…