85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ சரக்கு விமானம் விழுந்து விபத்து…!

Published by
Rebekal

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி-130 எனும் இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்துள்ளது.

பிலிப்பைன்சில் உள்ள விமானப் படைக்குச் சொந்தமான c-130 எனும் ராணுவ சரக்கு விமானம் சுலுவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 85 பேருடன் கிளம்பிய இந்த விமானம் காலை 11.30 மணியளவில் இந்த ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரை இறங்கிய பொழுது விபத்தில் சிக்கி உள்ளதாகவும், இந்த விமானத்தில் இருந்த 85 பேரில் இதுவரை 40 பேர் வரை மீட்கப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், விமானம் எப்படி தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து முறையான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் விமானம் தரையிறங்கும் போது விழுந்து உடனடியாக தீ பற்றியதால் இந்த விபத்தில் பலர் இறந்து இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதி சிரிலிட்டோ சோபெஜானா அவர்கள் மீட்புப் படை வீரர்கள் விமானப்படை தளத்தில் களமிறங்கியுள்ளதாகவும், இந்த விபத்தில் இருந்து அதிக உயிர்களை காப்பாற்ற முடியும் என தாங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago