பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல உலக நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 91% கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்டதாக உள்ள நிலையில் இந்த தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸாக போடப்படும் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தற்போது முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் பிற நாடுகளிலும் பைசர் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…