பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல உலக நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 91% கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்டதாக உள்ள நிலையில் இந்த தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸாக போடப்படும் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தற்போது முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் பிற நாடுகளிலும் பைசர் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…