கொரோனா பாதிப்பு காரணமாக ரஷ்யாவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ள நிலையில், தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் தான் தாக்கும் என கடந்த சில மாதங்கள் முன்பு வரை நம்பியிருந்த நிலையில், தற்பொழுது சிங்கங்கள், குரங்குகள், நாய்கள் என செல்லப் பிராணிகளுக்கும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.
இதனை அடுத்து விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக பலர் தங்களது செல்லப் பிராணிகளை துரத்தி விட்டு விடுகின்றனர். ஆனால் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டுவிட மனமில்லாமல் செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலோரியா அவர்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே நீங்கள் வளர்க்கக்கூடிய நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை தெருக்களில் விட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், பலரும் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…