வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் வீரியமுள்ள கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் இருந்தாலும், மக்களுக்காக அரசு அவ்வப்போது சில தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக சில இடங்களில் கொண்டாட்டத்துக்கு தடை விதித்து இருந்தாலும், தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், மொத்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வருடம் தோறும் நடத்தக்கூடிய புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சமூக இடைவெளியுடன் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாகவும், கடற்கரை சாலையில் பொது மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் புத்தாண்டு கொண்டாடலாம் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…