ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா நடைமுறைக்கு வந்தால் திரைப்படங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என ஃ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறியுள்ளார்.
மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா திரையுலகினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என பல நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து தற்பொழுது ஃ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா படி ஒரு முறை படம் தணிக்கை செய்யப்பட்ட பின்பு மீண்டும் தணிக்கை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளதால் இந்த அதிகாரம் மத்திய அரசுக்கோ அல்லது மத்திய அரசை சார்ந்த குழுவுக்கோ கொடுக்கப்பட்டு விட்டால் நிச்சயம் திரைப்படங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என கூறியுள்ளார். மேலும் அரசுக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்கள் அனைவரையும் திரையுலகினரால் சமாளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…