இத்தாலியில் 9 வாரத்திற்குப் பின் பொது இடங்களில் திரண்ட மக்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸ் பரவலால் முதன் முதலில் ஊரடங்கை அமல்படுத்திய இத்தாலி தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் 2,11,938 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,079 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே. அதன்பின், மார்ச் 31 ஆம் தேதி கொரோனா பாதிப்பில் இத்தாலி உச்சத்தை தொட்டுவிட்டதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு அறிவித்தது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் கியூபா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களை அனுப்பி இத்தாலி நாட்டிற்கு உதவி செய்தது. இதன் விளைவாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்த 3வது வாரத்தில் இருந்து கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதை தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு பிரதமர் முடிவு செய்தார். அதன்படி, ஊரடங்கில் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டதால் 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் பொது இடங்களில் நடமாட தொடங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட 9 வாரங்களுக்கு பின்னர் பூங்காக்கள், உணவகங்கள் திறக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரகங்கள், அருகாட்சியங்கள் மற்றும் சிகை அலங்காரம் நிலையங்கள் ஆகியவை மே 18 ஆம் தேதிக்கு பின் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே மீட்டெடுக்கும் முயற்சியாக தொழிற்சாலைககளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களை வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் மாற்றம் தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தாலி நாட்டில் ஜூன் மாதத்தில் இருந்து முழு இயல்பு நிலை திரும்பும் என அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

56 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

19 hours ago