பாலிவுட் இயக்குநருடன் அடுத்து இணைகிறாரா…? மக்கள் செல்வன்.!

Published by
Ragi

விஜய் சேதுபதி ஊரடங்கில் வெப் சீரிஸ் மற்றும் குறும்படம் என்று பிஸியாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பெஜோய் நம்பியார் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். தெலுங்கில்  ‘Uppena’ படத்தில் வில்லனாகவும்  நடிக்கவுள்ளார் . இந்த படங்களை தொடர்ந்து காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும், கடைசி விவசாயி, கா பே ராணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில், அவர் விரைவில் இரண்டு வெப் சீரிஸ்களில் நடிக்கவுள்ளதாகவும், அதனை குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் அவர் குறும்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பெஜோய் நம்பியார் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கான வேலைகளில் விரைவில் இறங்கப் போவதாகவும் கூறியுள்ளார். பெஜோய் Davide, solo, shaitan உள்ளிட்ட பாலிவுட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி ஏற்கனவே தனது மகள் மற்றும் ரெஜினா கெசன்ட்ராவுடன் ஒரு மணிநேர குறும்படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

9 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

9 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

9 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

9 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

10 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

10 hours ago