விலங்குகளுக்கும் ஓய்வூதியமா…? எந்த நாட்டில் தெரியுமா…?

Published by
லீனா

காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுவாக அரசு வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு ஓய்வூதியம் வழங்குவது உண்டு. இது மனிதர்களுக்கு தான் அரசு இதுவரை வழங்கி வந்தது. ஆனால் போலந்து நாட்டில் எல்லைப் பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுவாக நாய்கள் மற்றும் குதிரைகள் பணியில் இருக்கும்போது சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறது ஓய்வுக்குப் பின் இந்த நாய்கள் அல்லது குதிரைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது அவற்றை தத்தெடுக்க விரும்பும் அவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன.

பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் வேண்டுகோளின் பேரில் இதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு புதிய சட்டத்தை முன்மொழிந்தது. இந்த சட்டத்தின்கீழ் நாய்கள் மற்றும் குதிரைகள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலந்து நாட்டின் உள்துறை அமைச்சர் மோரிஸ் கம்மின்ஸ்கி கூறுகையில், இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்றும், மேலும் இந்த திட்டமானது இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன், இந்த திட்டமானது சட்டமாக்கபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

23 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago