போர் பதற்றம் வேண்டாம்.. பாகிஸ்தான் – ஈரான் நாடுகள் இடையே சுமூக உடன்பாடு.!

Published by
மணிகண்டன்

பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பலுசிஸ்தான் பகுதியில் பல்வேறு தீவிரவாத கும்பல்கள் முகாமிட்டுள்ளன. இந்த தீவிரவாத கும்பலானது ஈரான் மீது அவ்வப்போது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளன. இதனால் கடந்த செவ்வாய் அன்று ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் ஈரானில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். இரு நாட்டு ராணுவமும் அண்டை நாடுகளுக்கு உட்பட்ட எல்லைகளில் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் இரு நாட்டு போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஈரான் – பாகிஸ்தான் மோதல்.! உலக நாடுகள் கருத்து.!

இரு நாட்டு ராணுவமும் எதிரெதிர் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்களையே தாக்கியதால் பெரிய அளவிலான போர் என்பது நடைபெறவில்லை.  இருந்தும் ஈரான் தலைநகர் தெஹ்ராவில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரியும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஈரான் தூதரக அதிகாரி ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு செல்லும் அளவுக்கு பதற்றம் உருவானது.

இதனை அடுத்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபை ஆகியவை ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் நிலவும் போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தின. சீன அரசானது, ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தலம் செய்து வைக்க முன்வந்ததது.

இப்படியான சூழலில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் தங்களுக்குள் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்ற நிலைமையை தணிக்க வழி வகுத்து கொண்டனர்.

இஸ்லாமாபாத்தின் வெளியுறவு அமைச்சகம் இரு நாட்டு கூட்டு அறிக்கையை வெளியிட்டது, ‘ இரு நாட்டு போர் பதற்ற நிலைமையை தணிக்க மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட இரு நாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான மரியாதைக்கான ஒத்துழைப்பை ஆதரிக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

31 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

39 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

48 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

56 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago