மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சவூதி அரேபியாவில், விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம், மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சவுதி சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சவூதி குடிமக்கள் மற்றும் விமான பணியாளர்கள் தடுப்பூசி போடாவிட்டால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களை தனிமைப்படுத்தலில் தங்குவதற்கு சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளை விமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் தடுப்பூசி சான்றிதழை வழங்கினால் தனிமைப்படுத்த தேவையில்லை என்றும், 8 வயதுக்கு மேற்பட்ட சவுதி அல்லாத பயணிகள் 72 மணிநேரத்திற்கும் குறைவான எதிர்மறையான பி.சி.ஆர் கோவிட் -19 சோதனை முடிவைக் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…