இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக வாக்குச் சாவடியில் வரும்போதும், வெளியேறும் போதும், கையை சுத்தம் செய்ய வேண்டும், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், முககவசம் அணிந்து வர வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…