இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக வாக்குச் சாவடியில் வரும்போதும், வெளியேறும் போதும், கையை சுத்தம் செய்ய வேண்டும், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், முககவசம் அணிந்து வர வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…