மனதில் நினைத்தவரை திருமணம் செய்ய இந்த பரிகாரத்தை செய்தால் போதும்..!

Published by
Sharmi

மனதில் நினைத்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். 

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையை உயிர் போன்று மதித்தனர். தற்போதைய காலத்தில் ஆண், பெண் இருவரும் சம உரிமையில் வாழ்ந்து வருகின்றனர். ஆண், பெண் இருவரும் நன்கு புரிந்து பழகி வருகின்றனர். அவரவர்களது துணையை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

அவ்வாறு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து பழகி திருமணம் செய்ய நினைத்தால் அதனை பெற்றோரிடம் கூறி அவர்களது சம்மதத்துடன் செய்வது மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், பலரும் பெற்றோரிடம் கூறுவதற்கு தயக்கம் கொள்கின்றனர். பெற்றோர் இதனை ஏற்றுக்கொள்வார்களா? இல்லை மறுத்துவிடுவார்களா? என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. இதனால் இருவரும் திருமணம் செய்ய எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பெற்றோரின் சம்மதத்துடன் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

விரும்பியவரை கரம் பிடிக்க ஒன்றாக சேர்ந்திருக்கும் இரட்டை வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வாழைப்பழத்தில் திருமணம் செய்ய நினைக்கும் ஆண், பெண் இருவரின் பெயரையும் எழுதிக்கொள்ளுங்கள். மனதில் விநாயகப்பெருமானை நன்கு வேண்டி கொண்டு, சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் விநாயகரிடம், மனதார விரும்பிய இருவரும் ஒன்றாக வாழ்வில் இணைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

இதனை அடுத்து இந்த வாழைப்பழத்தை பசு மாட்டிற்கு தானம் கொடுத்து விடுங்கள். இதே போன்று 9 முறை செய்து வந்தால் நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள நினைத்தீர்களோ அவரை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த பரிகாரத்தை திருமணம் ஆன தம்பதிகள் சண்டையால் பிரிந்து இருந்தாலும், ஒன்றாக இணைய இதனை செய்யலாம்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago