படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்..!

Published by
murugan
  • அமெரிக்காவில் 5 வயது சிறுவன் படுக்கையில்  உட்கார்ந்து கொண்டிருந்த போது உடையுடன்  சேர்ந்து சிறுநீர் கழித்துள்ளார்.
  • அதை பார்த்த பெற்றோர் அந்த சிறுவனை அடித்து உள்ளனர் .பலத்த காயம் அடைந்ததால் சிறுவன் இறந்து உள்ளார்.
  • இதை தொடர்ந்து மகனின் உடலை புதைத்து விட்டனர்.

அமெரிக்காவை சேர்ந்தவர் ஆண்ட்ரூ .இவரது மனைவி ஜோயன். இவர்களின் 5 வயது மகன் ஏஜே.  கடந்த ஏப்ரல் மாதம் ஏஜே வீட்டில் உள்ள படுக்கையில்  உட்கார்ந்து கொண்டிருந்த போது உடையுடன்  சேர்ந்து சிறுநீர் கழித்துள்ளார்.

இதை பார்த்த தாய் ஜோயன் கோபத்தில் அடித்து கொண்டு இருந்தார்.பின்னர் அங்கு வந்த தந்தை ஆண்ட்ரூ சேர்ந்து அடித்துள்ளார். இவர்கள் இருவரும் அடித்ததில் ஒரு கட்டத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத போது இருவரும் சிறுவனின் உடலை புதைத்து உள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தாய் ஜோயன்  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அவருக்கு 20 ஆண்டு முதல் 60 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் ஜோயன் தண்டனை அறிவிக்கப்படும் அதே நேரத்தில் ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Published by
murugan

Recent Posts

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

10 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

37 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

1 hour ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

4 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

4 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

5 hours ago