நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அதில் வார இறுதியில் தனது பெற்றோர் கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டதாகவும், உடனடியாக வீட்டில் உள்ள அனைவருமே கொரோனாவுக்கான பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அதில் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், நானும், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனவே உங்கள் பிரார்த்தனைகளும், ஆசீர்வாதமும் அவர்களை மீட்க உதவும் என்றும் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து தமன்னா தனது மும்பை வீட்டில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசிகர்கள் பலர் அவரது பெற்றோர் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…