நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அதில் வார இறுதியில் தனது பெற்றோர் கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டதாகவும், உடனடியாக வீட்டில் உள்ள அனைவருமே கொரோனாவுக்கான பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அதில் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், நானும், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனவே உங்கள் பிரார்த்தனைகளும், ஆசீர்வாதமும் அவர்களை மீட்க உதவும் என்றும் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து தமன்னா தனது மும்பை வீட்டில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசிகர்கள் பலர் அவரது பெற்றோர் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…