பெற்றோரின் அலட்சியம்! 123 காந்தமணிகளை விழுங்கிய 5 வயது சிறுவன்!

Default Image

5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள்.

சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான்.

இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுவனை அபரிசோதித்த மருத்துவர்கள், பந்துகள் 5 நாட்களில் தானாக வெளியே வந்துவிடும் எனக் கூறியுள்ளார். ஆனால், 5 நாட்கள் ஆகியும் பந்துகள் வெளியே வராத நிலையில், சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே சிறுவனுக்கு எக்ஸ்ட்-ரே எடுத்து பார்த்ததில் சிறுவனின் உடலில், ஏராளமான பந்து உருண்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், சிறுவனின் உடலில் 123 காந்தமணிகள் அகற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court