இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை.. தொலைதொடர்பு ஆணையம் அதிரடி!!

Default Image

வரைமுறைகள் அற்ற வகையில் வீடியோக்கள் பகிரப்படுவதாக பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடைசெய்யப்படுவதாக அம்மாநில தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில், டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம் இணைந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த முடிவிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்த அவர், டிக்டாக் நிறுவனம் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்குமெனவும், பயனர்களின் தகவல் பாதுகாப்பாக இருக்குமெனவும் டிக்டாக் செயலி செயல்பட அனுமதியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீன செயலியான டிக்டாக்-கில் வரைமுறைகள் அற்ற வகையில் வீடியோக்கள் பகிரப்படுவதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து. டிக்டாக் செயலி பாகிஸ்தானில் தடை செய்யப்படுவதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு வாரியம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi