போருக்கு நடுவில் ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 23-24) ரஷ்யா சென்றார். 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மாஸ்கோவிற்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மூன்று மணிநேர சந்திப்பு கிரெம்ளில் நடந்தது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கூறப்பட்டது.

சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரம் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது என்றும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குறித்து வருத்தம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் நிலைமை குறித்து, IIOJK (இந்திய சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர்) மனித உரிமைகள் நிலைமையை பிரதமர் எடுத்துரைத்தார்.  ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் லாகூர் மற்றும் சிம்லா ஒப்பந்தங்களை மாஸ்கோ மட்டுமே பின்பற்றும் என்று இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் கூறிய சில வாரங்களில், இது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கிரெம்ளினில் அமர்ந்து ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார். அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது முதல் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு அமைதியான தீர்வுக்கான “இன்றியமையாதது” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

59 minutes ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

1 hour ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

1 hour ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

3 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

3 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

4 hours ago