போருக்கு நடுவில் ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 23-24) ரஷ்யா சென்றார். 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மாஸ்கோவிற்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மூன்று மணிநேர சந்திப்பு கிரெம்ளில் நடந்தது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கூறப்பட்டது.

சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரம் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது என்றும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குறித்து வருத்தம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் நிலைமை குறித்து, IIOJK (இந்திய சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர்) மனித உரிமைகள் நிலைமையை பிரதமர் எடுத்துரைத்தார்.  ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் லாகூர் மற்றும் சிம்லா ஒப்பந்தங்களை மாஸ்கோ மட்டுமே பின்பற்றும் என்று இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் கூறிய சில வாரங்களில், இது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கிரெம்ளினில் அமர்ந்து ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார். அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது முதல் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு அமைதியான தீர்வுக்கான “இன்றியமையாதது” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 hour ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 hour ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

2 hours ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

2 hours ago

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

2 hours ago

விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் … தற்போதய நிலவரம் என்ன?

ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…

3 hours ago