பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்….!!

Default Image
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி.இவர் தென்கொரியா நாட்டில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் பங்கேற்பதற்க்காக லாகூர் நகரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறி விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்தனர்.
இந்நிலையில் அவர் கூறுகையில் , நான்  நாட்டை விட்டு தப்பியோடவில்லை . பிரதமர் இம்ரான்கான் அரசியல் எதிரிகளை தாக்க வேண்டும் என்பதற்க்காக இப்படி செய்கின்றார் என்று தெரிவித்தார்.இதையடுத்து இவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்