ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்திய காஷ்மீர் எல்லை பகுதியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆய்வு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதாவது பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்து போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்திய காஷ்மீர் எல்லை பகுதியை ஆய்வு செய்தார் இம்ரான் கான் .பிரதமருடன் உடன் பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரலும் உடன் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு காஷ்மீர் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இம்ரான் கானின் இந்த செயல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…