ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு வழக்கமாக இந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அத்துமீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு பாகிஸ்தான் நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுள்ளனர். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுத்ததுடன் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், ஜம்மு காஷ்மீரில் ஏதேனும் தாக்குதல் நடத்துவதற்காக வந்து இருந்தாரா? இவர் வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த பல்வேறு கோணங்களில் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…