என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்த பாகிஸ்தான்.!

Published by
murugan

தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14- ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்ப்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வந்த நிலையில், தற்போது  13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.  இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை சிக்க வைக்க முயன்ற இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) “குற்றப்பத்திரிகை” என்று அழைக்கப்படுவதை திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சிக்கவைக்க இந்தியா இதைச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் எதிர்ப்பு கருத்துக்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக புல்வாமா தாக்குதல் நடத்தியதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி பொய்யாக குற்றம் சாட்டியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் அதன் குறுகிய உள்நாட்டு அரசியல் நலன்களை மேலும் மேம்படுத் துவதற்காக குற்றப்பத்திரிகை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் தவறான செயலை பாகிஸ்தான் விமானப்படை திறம்பட எதிர்கொண்டது. இதன் விளைவாக இரண்டு இந்திய போர் விமானங்கள் வீழ்ச்சியடைந்தது.

அதில், இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பின்னர், இந்திய விமானி பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார் என கூறப்பட்டு இருந்தது.

Published by
murugan

Recent Posts

முதல்ல சீக்கிரம் தூங்குங்க…பார்முக்கு வாங்க! பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த பஞ்சாப் வீரர்!

முதல்ல சீக்கிரம் தூங்குங்க…பார்முக்கு வாங்க! பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த பஞ்சாப் வீரர்!

பஞ்சாப் :  ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…

5 minutes ago

ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த பிரதமர் மோடி! பலே திட்டம் திட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…

50 minutes ago

“கண்டிப்பா நீங்க வரணும்” சுனிதா வில்லியம்ஸிற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி!

டெல்லி :  9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை  பத்திரமாக பூமிக்கு கொண்டு…

2 hours ago

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொன்ன பதில்?

சென்னை :  கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில்…

2 hours ago

“திமுக அரசால் இன்னும் எத்தனை உயிர் பலி?” அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை…

2 hours ago

“தெர்மாகோல்., தெர்மாகோல்., என ஓட்டுகின்றனர்!” செல்லூர் ராஜு வருத்தம்!

சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…

3 hours ago