பாகிஸ்தான் விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!

Published by
Rebekal
  • நேற்று பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியது.
  • இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எனும்  எக்ஸ்பிரஸ் ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் அதே சமயம் ராவல்பிண்டி நகரில் இருந்து காராச்சி நோக்கி சையத் எனும் எக்ஸ்பிரஸ் ரயில்  500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. மில்லட் ரயில் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள தார்கி என்ற இடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ரயில் தடம் புரண்டதால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பாய்ந்து உள்ளது.

அதே சமயம், அருகில் உள்ள தண்டவாளத்தில் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலுடன் மில்லட் ரயிலின் பெட்டிகள் மோதியதில் இரு ரயில்களும் பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் மில்லட் ரயிலில் இருந்த 14 பெட்டிகள் கவிழ்ந்ததால் பல பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முதல் கட்டமாக இந்த விபத்தில் 50 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.மேலும், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 13 அதிகரித்து மொத்தம் 63 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Published by
Rebekal

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

4 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

5 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

6 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

7 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

8 hours ago