பாகிஸ்தானிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி எனும் நகரிலிருந்து வடக்கே உள்ள நசீமாபாத் எனும் பகுதியில் இயங்கி வரக்கூடிய பெட்ரோல் நிலையம் ஒன்றில் திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடிப்பில் அங்கு நின்று கொண்டிருந்த 4 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இது விபத்து என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலிண்டர் வெடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…