கொரோனா தொற்றால் பங்காளி நாடான பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு… மேலும் 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…

Published by
Kaliraj
நம் அண்டை நாடான சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று  தற்போது உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தெற்காசியவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக நம் அண்டை நாடு பாகிஸ்தான் உள்ளது. ஆனால்,இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு 26 நாட்களுக்கு பிறகுதான் பாகிஸ்தானில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. மக்களிடம்  போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதன் விளைவாக அதிகமாக அங்கு தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தான் அண்டை நாட்டின் அனைத்து எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில், அதிவேகமாக  பரவி வரும் கொரோனா வைரசால் பாகிஸ்தானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 1500-ஐ தாண்டி தற்போது 1597ஆக உள்ளது.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்தான் அதிக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் சிந்து பகுதியில் 469 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது வரை பாகிஸ்தானில் 14 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

6 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

8 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

8 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

11 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

11 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

11 hours ago