Hossein Amir-Abdollahian, Minister of Foreign Affairs in Iran [Image source : Reuters]
பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.!
பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஈரான் தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் முகாம்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகினர். இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் வியாழக்கிழமை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி இதுகுறித்து கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் ஈரான் எல்லையில் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு பதில் கூற வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் ஈரான் விளக்கம் கேட்டுள்ளது.
பாகிஸ்தானில் பலூச் இன மக்கள் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ஈரானில் பலுசிஸ்தான் அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பிற்கு ஈரான் மறைமுக ஆதரவு அளிக்கிறது என்பது பரவலாக சர்வதேச அளவில் பரவி வரும் செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…